Saturday, September 1, 2018

இரண்டு வாரங்களாக நான் இந்த அரண்மனையில் இருந்தேன். ஒன்றும் நிகழவில்லை

பிஜான் இலாஹி

இந்தக் கவிதை அரேபிய ஆயிரத்தொரு இரவுகளான “The House and the Belvedere” (night 599) கதையை ஒரு கவித்துவ மறுகூறலாக வழங்குகிறது. ʻAbd al-Laṭif Tasuji Tabrizi (1858) அவர்களின் பெர்ஸிய மொழிபெயர்ப்பான ஆயிரத்தொரு இரவுகளின் சொற்றொடராக்கத்தை இலாஹியின் கவிதை மறு உருவாக்கம் செய்கிறது.


பாக்தாத்தின் அலங்கார வளைவுகளும்
டிக்ரிஸின் அலங்கார வளைவுகளும்-
முடிவுறாமல் உள்ள கதை
ஒரு கவிதையாக மாறலாம், முடிவுற்ற
ஒரு கவிதை           ஒரு கதையை உருவாக்கக்கூடும். அதனால்தான்
கவிஞர்கள் தமது கவிதை வரிகளை எப்பொழுதும் உடைக்கின்றனர்.
பாக்தாத்தைச் சுற்றிலும் இலக்கற்ற நடைகளிலிருந்து
ஆயிரத்தொரு இரவுகளின் பல பளிங்குக் கற்கள் பொருத்தப்பட்ட
அங்காடித் தெருவில் உள்ள வீட்டின் மீதுள்ள வரியை உடைக்க
விரும்பினேன். அங்குதான் கூரைகள் மீது
நீலவண்ண ரத்தினக் கற்களும் பொன்னும் தீட்டப்பட்டுள்ளன.
”பத்து தினார்கள் மாத வாடகை!”
”விளையாடுகிறீர்களா?” அங்காடிக்காரர் கூறுகிறார்.
“நான் விளையாடவில்லை, ஆனால் அந்த வீட்டினுள் நுழைபவர்
நோய்வாய்ப்பட்டு, இரண்டு வாரங்களுக்குள் இறந்து விடுவார்.”
இரண்டு வாரங்களாக
நான் இந்த அரண்மனையில் இருந்தேன், ஒன்றும் நிகழவில்லை.
பொன்நிற சூரியாஸ்தமனங்களை மட்டும் கண்டேன்:
நீங்கள் அந்த முனகல்களைக் கேட்கலாம்!
”அடேய், பையா, பெல்வெதர் அரண்மனையை நீ பார்த்ததில்லையா?”
அங்காடிக்காரரின் மனைவி கூறினார்.
ஆனால் கூரையில் என்ன உள்ளதென்றால்
பாக்தாத்தின் அலங்கார வளைவுகளும் அல்ல,
டிக்ரிஸின் அலங்கார வளைவுகளும் அல்ல மற்றவை-    
.

தமிழில்: மோகன ரவிச்சந்திரன்


பிஜான் இலாஹி (1945-2010) நவீனக் கவி மற்றும் டி.எஸ்.இலியட், ஆர்தர் ரிம்பாட், ஹென்றி மிக்காக்ஸ், ஃப்ரெட்ரிச் ஹோல்டர்லின் மற்றும் பல முக்கியக் கவிகளின் ஆக்கப்பூர்வ மொழிபெயர்ப்பாளர். Other Poetry (she’re digar) என அழைக்கப்படும் கவிதை இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மிக முக்கியமான பிரதிநிதி. இலாஹியின் பாணி அவர் கவிதைகளின் சர்ரியலிசக் கற்பனைகளாலும், சிக்கலான உருமாற்றங்களாலும், வழக்கத்திற்கு மாறான சொல்லாடல்களாலும் வித்தியாசமானது. கவித்துவ வெளிப்பாட்டின் ஒரு சிந்தனை முரணையும் அறிதல் வடிவத்தையும் இலாஹி மேம்படுத்தினார். அது பழங்கால ஈரானியத் தொன்மக் கூறுகளையும், பெர்ஸிய சூபியிசத்தையும் ஃப்ரான்சின் சர்ரியலிசத்தையும் உள்ளடக்கியது. அவருடைய படைப்புத் தொகுப்புகளை வெளியிடத் தயக்கம் கொண்ட இலாஹி பொதுவெளியில் நுழைய மறுத்து விட்டார். உயிர்ப்புடன் ஒரு தனிமை மிகுந்த இருத்தலை வழி நடத்தினார். அவருடைய இறப்புக்குப் பின் வெளியிடப்பட்ட அவருடைய கவிதைகளும் மொழிபெயர்ப்புகளும் பெர்ஸிய இளம் கவிஞர்களின் மீது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.   

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...