ஒரு கனவுக்குள்
ஒரு கனவு
எட்கர் ஆலன்
போ
புருவத்தின்
மீதான இந்த முத்தத்தை எடுத்துக் கொள்!
பிறகு,
இப்போது உன்னிடமிருந்து விடைபெறுதலையும்,
இவ்வாறு
ஒப்புக் கொள்கிறேன் –
உன்மீது
தவறில்லை, யார் கருதியது
எனது
நாட்கள் ஒரு கனவென்று;
இன்னும்
எதிர்பார்ப்பு தூரப் பறந்தால்
ஒரு
இரவில், அல்லது ஒரு நாளில்,
ஒரு
பார்வையில், அல்லது இன்மையில்,
ஆகவே
சற்றுக் குறைவானது ஓடி விட்டதா?
நாம்
காணும் அல்லது தோன்றும் அனைத்தும்
ஒரு
கனவுக்குள் ஒரு கனவு.
அலைகளால்
துன்புறுத்தப்பட்ட கரையின்
கர்ஜித்தலின்
மத்தியில் நிற்கிறேன்,
பொன்னிற
மணலின் தானியங்களை
எனது
உள்ளங்கையில் பிடித்திருக்கிறேன் –
எவ்வளவு
கொஞ்சம்! இன்னமும் அவை எவ்வாறு தவழ்கின்றன
எனது
விரல்களின் வாயிலாக வெகு ஆழத்திற்கு,
நான்
அழுகையில் – நான் அழுகையில்!
ஓ
கடவுளே! அவற்றை இறுகப்பற்றி
என்னால்
உள்வாங்க முடியாதா?
ஓ
கடவுளே! இரக்கமற்ற அலைகளிடமிருந்து
என்னால்
ஒன்றையாவது காப்பாற்ற முடியாதா?
நாம்
காணும் அல்லது தோன்றும் அனைத்தும்
ஒரு
கனவுக்குள் ஒரு கனவா?
அமைதி இழந்த
பள்ளத்தாக்கு
எட்கர் ஆலன்
போ
ஒருமுறை
அது சிரித்தது ஒரு அமைதியான பள்ளத்தாக்கு
அங்கு
மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை;
அவர்கள்
யுத்த களத்திற்குச் சென்று விட்டனர்,
சாந்தமான
கண்கள் கொண்ட நட்சத்திரங்களை நம்பி,
ஒவ்வொரு
இரவும், அவர்களின் வான்நிறக் கோபுரங்களிலிருந்து,
பூக்கள்
மீது கவனம் செலுத்தியபடி,
அனைத்து
நாட்களின் இடையிலும்
சிவப்புச்
சூரிய ஒளி சோம்பலாகப் படுத்திருக்கும்.
இப்போது
ஒவ்வொரு பார்வையாளரும் ஒப்புதல் அளிப்பார்
துயரப்
பள்ளத்தாக்கின் அமைதியிழப்பை.
அங்கு
எதுவும் அசைவற்று இல்லை –
மாயத்
தனிமை மீது
மகிழ்ச்சியற்றுச்
சிந்திக்கும் கர்வத்தை எதுவும் காப்பாற்றாது.
ஆ,
பனி படர்ந்த தீவுகளைச் சுற்றிலும் உள்ள
குளிர்
நதிகளைப் போல் துடிக்கும்
அந்த
மரங்கள் எந்தக் காற்றாலும் கிளர்ச்சியடையவில்லை!
ஆ,
அந்த மேகங்களை எந்தக் காற்றாலும் விரட்டியடிக்க முடியவில்லை
அமைதியற்ற
சுவர்க்கம் வழியாக அவை சலசலக்கின்றன
நடுக்கத்துடன்,
காலையிலிருந்து மாலை வரை,
அங்கு
ஊதா நிறங்களின் மீது அவை படுத்திருக்கின்றன
மானுடக்
கண்களின் எண்ணற்ற வகைகளில் –
அங்கு
லில்லி மலர்களின் மீது அவை அலையடிக்கின்றன,
அழுகின்றன
ஒரு பெயரற்ற கல்லறை மீது!
அவை
அலைகின்றன: அவற்றின் நறுமண இதழ்களுக்கு வெளியே
நித்யத்துவப்
பனித்துளிகள் சொட்டு சொட்டாய்ச் சிந்துகின்றன.
அவை
அழுகின்றன: மென்மையான தண்டுகளிலிருந்து
வற்றாத
கண்ணீர்த் துளிகள் ரத்தினக் கற்களில் இறங்குகின்றன.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment