கவிதையை உண்ணுதல்
மார்க் ஸ்ட்ரேண்ட்
எனது கடைவாயில் வழிகிறது மை.
எனது மகிழ்ச்சி போல வேறொன்றில்லை.
நான் கவிதையை உண்டு கொண்டிருக்கிறேன்.
நூலகப் பெண்மணி தான் காண்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார்.
அவர் கண்களில் கலவரம்.
அவர் தனது ஆடைக்குள் இருந்த தனது கரங்களை வீசி நடக்கிறார்.
கவிதைகள் வெளியேறுகின்றன.
ஒளி மங்குகிறது.
தரைத்தளப் படிக்கட்டுகளிலிருந்து நாய்கள் மேலே வருகின்றன.
அவற்றின் விழிப்பந்துகள் சுழல்கின்றன.
அவற்றின் பொன்னிறக் கால்கள் தூரிகை போல மின்னுகின்றன.
இரங்கத்தக்க நூலகர் தனது பாதங்களை உற்று நோக்கி அழுகிறார்.
அவரால் சட்டென உணர்ந்து கொள்ள முடியவில்லை.
நான் முழந்தாளிட்டு அவர் கையை நக்கினேன்,
அவர் அலறுகிறார்.
நான் ஒரு புதிய மனிதன்.
அவரைப் பார்த்து உறுமிக் குரைக்கிறேன்.
அறிவார்த்த இருளில் பேருவகையுடன் துள்ளிக் குதிக்கிறேன்.
தமிழில்: மோகன ரவிச்சந்திரன்
No comments:
Post a Comment