ஏதேதோ
வார்த்தைகளை உச்சரித்து
என்னை
உன் வாசலிலிருந்து விரட்ட முற்படுகிறாய்
மெல்லிய
புன்னகை,
மிதமிஞ்சிய
உற்சாகம் அல்லது
வெறித்த
பார்வைகளை வீசியும்
என்னை
விரட்டிவிடத் துணிகிறாய்
நீ
அறிந்தும் அறியாத ஏதாவது ஒரு தருணத்தில்
உன்னை
அழைத்துச் செல்ல வருவேன் –
உனக்கு
விருப்பமில்லை என்றாலும் கூட...
No comments:
Post a Comment