Sunday, December 25, 2016

மூன்று கவிதைகள்

உள்ளீடு
ஒரு பனைநுங்கினுள்
பத்திரமாய் உறங்குகிறது
பல வருடங்களாய்ப் பெய்த மழை.


துணிச்சல்
மழையின் வருகையை அறிவித்தபடி
பறந்து செல்லும் பட்டாம்பூச்சிக்குச்
சிறகு நனைந்து விடுமென்ற
பயமில்லை.

                           
காலாதீதம்
ஈரமனதை வேர்களில் பூசி
ஆசை ஆசையாய் பூஞ்செடி நடுகிறது
வரும் மழைக்காலத்தில்
அச்செடியில் பூக்கப் போகும்
ஒரு மஞ்சள் நிறப் பூ.

மோகன ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...