Friday, April 5, 2013

Stephane Mallarme poem

ஸ்டீபன் மல்லார்மே கவிதை 

புனிதமானவள் 

சன்னலில் ரகசியமாக ஒளிந்தபடி 
முன்னர் புல்லாங்குழல் அல்லது மாண்டலின் என அறியப்பட்ட 
தகதகக்கும் அவளுடைய இசைக்கருவியின் பொன் மெருகை 
மெதுவாக உதிர்க்கும் முதிய சந்தன மரத்துண்டு 
கம்பீரமான ஓடை குறித்து உரைக்கும் 
பழமை வாய்ந்த புத்தகத்தை விரித்தபடி 
சோபையற்ற புனிதமான ஒரு உயிராக இருக்கிறது
முன்னர் 
தெளிவற்ற உச்சரிப்புக்கும் 
ஒரு நாளின் இறுதியில் நடைபெறும் 
ஒழுங்கு குலையாத வழிபாட்டில் பாடப்படும் 
இரவுப் பாடலுக்கும் ஏற்றபடி 
காட்சிப்படுத்தும் சன்னலில் 
(காட்சிப்படுத்துதல் போல மின்னும் கறை படிந்த கண்ணாடி)
மாலை நேரச் சிறகுடன் 
தேவதையால் வடிவமைக்கப்பட்ட ஒரு யாழ் 
உவகை பொங்கும் நடனத்தால் மெருகேற்றுகிறது 
முதிய மரத்துண்டோ அல்லது பழமையான புத்தகமோ 
எதுவுமில்லாமல் 
பெரும் இரைச்சலுடன் நெருக்கமாக இணைந்து முன் நகரும் 
இடையூரற்ற மக்கள் திரளுக்காக 
பெருமிதத்துடன் அவள் இறுக அணைக்கிறாள் 
ஏதுவான ஒரு பறவையின் சிறகுத் தொகுதி மீது 
நிசப்தமான ஒரு இசைக் கலைஞனை.

 
ஆங்கிலத்தில் : ஹென்றி பியரி 

தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 



No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...