Saturday, April 27, 2013

மேலும் ஒரு நாள் - 1

மோகன ரவிச்சந்திரன்

அவர்களிருவரும் அருகருகே நின்றபடி
ஒரு கோப்பின் பக்கங்களை
மேய்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவளது சுவாச நெடி தன் மீது மோதி விடாத அளவு
இடைவெளிவிட்டு சற்று ஒதுங்கி நிற்கிரானவன்
மின் விசிறிக் காற்றில் அலையும்
சுடிதாரின் துப்பட்டாவோ
குதிரை வால் கொண்டையிலிருந்து விலகிய
கூந்தலின் ஒரு இழையோ
தன்னைத் தொட்டு விடாதபடி
கவனமாக இருக்கிறான்
எழுத்துக்களின் மீது ஊர்ந்து செல்லும்
அவளது விரல்கள்
எழுத்துக்களின் ரகசியத்தை உணர்த்துகின்றன
கோப்பினைப் பிடித்திருக்கும்
அவனது இடது கையில் தெறிக்கும்
பதற்றத்தை மறைப்பதற்காக
விரைவாகப் பக்கங்களைப் புரட்டுகிறான்
காகிதங்களின் திரும்புதலில்
சதை மேகங்கள் மோதுகின்றன
அவனது விரலில் நெருப்பு பரவுகிறது
அவள் மேலும் நெருங்கி வந்து வாசிக்கிறாள்
அவன் கற்பனைகளைக் கடந்து
விலகி விலகி ஓடுகிறான்
எல்லையின்மையில் மிதக்கிறது
பசலை பாய்ந்த அவள் உடம்பு
இருவரும்
அவரவர் இருக்கைக்குத் திரும்புகிறார்கள்
கோப்பு இன்னமும் மேலாளரின் மேசை மீது தான் கிடக்கிறது.

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...