Thursday, April 11, 2013

 பால் வெலரி கவிதை

காலடிகள்

எனது அமைதியின் குழந்தைகளான உமது காலடிகள்
புனிதமாக, வெகு நிதானத்துடன் பதிக்கப்படுகின்றன
எனது கண்காணிப்பின் படுக்கை நோக்கி
ஊமையாக நகர்ந்து உறைகின்றன

தூய, தெய்வீக நிழலாக இல்லாதவர்கள்
மென்மையானவர்கள்,
உமது காலடிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன !
கடவுளர்களே !... நான் யூகித்த பரிசுகள் அனைத்தும்
இந்த வெற்றுப் பாதங்களை அடைகின்றன !

உமது மேம்பட்ட உதடுகளால்
அவற்றை அழிக்க முனைகிறீர்கள் , எனில்
எனது சிந்தனைகளின் ஒரு வசிப்பிடம்
ஒரு முத்தத்தின் ஆகாரம்

இந்த இளம் செயலுக்கு அவசரப்படவில்லை
மென்மையாகவும் மென்மையற்றதாகவும் இருப்பதற்கு, இல்லையா?
ஏனெனில் நான் உமக்காகக் காத்திருப்பதில் திளைத்தேன்
மேலும் எனது இதயமே உமது காலடிகள்


தமிழில் : மோகன ரவிச்சந்திரன் 

No comments:

Post a Comment

மூன்றாம் உலகின் வாசனை - மோகன ரவிச்சந்திரன்

ருஷ்டி பொதுவாக ஒரு எழுத்தாளர் என அறியப்பட்ட போதும் அவர் எப்படி ப் பிரபலமடைந்தார் என்று சொல்வது கடினம் - அவருடைய படைப்புக்கள் மூலமாகவா அல்லத...